கோவிட் வைரஸின் தோற்றம் : கைவிரித்தது அமெரிக்கா
கோவிட் வைரஸ் முதலில் எங்கு தோன்றியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் கைவிரித்துள்ளன.
அண்மை நாடான சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து கொடிய கோவிட் வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து ஆய்வு செய்ய புலனாய்வு அமைப்புக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. இந்த அமைப்பு மனிதர்கள் வாயிலான பிராணிகளுக்கு கோவிட் வைரஸ் பரவியதா அல்லது சீனாவின் வூஹான் வைரஸ் ஆய்வுகூடத்தில் கோவிட் தோன்றியதா என ஆராய்ச்சி செய்தது.
முதற்கட்ட ஆய்வறிக்கையை அமெரிக்க அரசிடம் அளித்தது. இதனையடுத்து ஆய்வு தற்போது மேம்படுத்தப்பட்ட முழுமையான ஆய்வறிக்கை அமெரிக்க அரசிடம் வழங்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“கோவிட் வைரஸ் இயற்கையாகவோ அல்லது சீன ஆய்வகத்தில் பிராணிகள் சோதனையில் கசிந்தோ பரவியிருக்கலாம் என கருதபோதுமான காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் இதனால்தான் கோவிட் பரவியது என உறுதியாக கூற முடியவில்லை. உயிரி ஆயுதமாக கோவிட் வைரஸ் உள்வாங்கப்பட்டிருக்கலாம் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது.
இது வூஹான் கூடத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்களால் பரப்பப்படும் தவறான தகவல். இந்த ஆராய்ச்சியில் நான்கு உளவு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், கோவிட் வைரஸ் இயற்கையாக உருவாகியுள்ளதாக திடமாக நம்புகின்றன. அதற்கேற்ப சமீபகாலமாக இந்த வைரஸ் சாதாரணமாக பிராணிகளிடம் பரவி வருகின்றது.
கோவிட் போன்ற ஒரு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பிராணியிடம் இருந்து உருமாறிய கோவிட் பரவியிருக்கலாம் என்ற கருத்தை ஓரளவு நம்புவதாக உளவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மற்றொரு உளவு அமைப்பு, வூஹான் ஆய்வுகூடத்தில் பிராணிகளின் சோதனையின்போது ஏற்பட்ட விபத்தில் கோவிட் பரவியிருக்கலாம் எனக் கூறியுள்ளது.
புதிய தகவல்கள் ஏதுமின்றி கோவிட் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கூற முடியாது. கோவிட் பரவலின் தொடக்கத்தில் ஆய்வு மாதிரிகள் சேகரித்து வைரஸின் கொடிய தன்மையை புரிந்து கொள்ள சர்வதேச விஞ்ஞானிகள் தவறிவிட்டனர்.
அதனால் மேலும் வலுவான ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் கோவிட் வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை உறுதியாக கூற முடியாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.