ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும்! வேறு வழியில்லை - முன்னாள் ஜனாதிபதி
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு காணொளி ஒன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய வன்முறை நாடு முழுவதும் பரவியது. குடிமகனின் உரிமைகளை அமைதியாகக் கோரி வந்த இளைஞர்கள் குழு மீது அரசு குண்டர்கள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இந்த வன்முறை நாடு முழுவதும் மேலும் மேலும் பரவி வருகிறது. இந்த நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே அல்லது தேசியப் பட்டியலில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பிரதமரை நியமித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும். வேறு வழியில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாட்டில் சட்டம் ஒழுங்கு உடனடியாக நிலைநாட்டப்பட வேண்டும். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் ஆறு மாதங்கள் நீடிக்கும் தேர்தலுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri
