கோவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகள் தொடர்பில் வெளியான தகவல்
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை அதிரிப்பதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், கோவிட் தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நாட்டில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அதேநேரம், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்து சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
