நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளாகிய மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கோவிட் -19 தொற்றினால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,அடால பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்படி,கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளதுடன்,கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
மேலும் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
