ஜனாதிபதி முன்னிலையில் நாளை பதவிப்பிரமாணம் செய்யும் புதிய அரசாங்கம்
புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை இராஜினாமா செய்தது.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவியில் இருந்த நிலையில், ஏனைய அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்.
அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
இந்த நிலையில் அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
