பசிலுக்காக பதவியை விட்டுக் கொடுத்தவருக்கு கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம் (Video)
சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு மேலதிகமாக மேலும் பல புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தற்போதுள்ள பதவிகளை விட அதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய தேசியப்பட்டியலில் இருந்து விலகிய ஜயந்த கெட்டகொடவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் கலாசார இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்பார் எனத் தெரியவருகிறது.
ஜயந்த கெட்டகொட 2000 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய அவர் பசில் ராஜபக்ஷவுக்காக அதனை விட்டுக்கொடுள்ளார். இந்த நிலையில் அவரை மீண்டும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக இணைந்து இராஜாங்க அமைச்சு பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் வெற்றிடமாக உள்ள இராஜாங்க அமைச்சு பதவிக்கு எஸ்.பீ.திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
