எரிபொருள் கிடைக்கவில்லை! பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நெருக்கடிகளுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
பகிரங்க மன்னிப்பு கோரிய அமைச்சர்
ஜூன் மாதத்திற்கான எரிபொருளுக்காக முன்பதிவுகள் செய்யப்பட்ட போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தம்மை நம்பி பொறுப்பை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கம் ஆகியோரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.