பேருந்தில் ஏறிய அமைச்சருக்கு நேர்ந்த பரிதாப நிலை
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பேருந்து ஒன்றில் ஏறிய போது, பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மகும்புர பல்தொகுதி மையத்தில் இன்று மின்னணு பயண அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கடும் வாக்குவாதம்..
இதன்போது சொகுசு பேருந்து ஒன்றினுள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஏறியுள்ளார்.
அமைச்சரின் வருகை காரணமகா வயதான தம்பதிகளை அந்த பேருந்தில் இருந்து பொலிஸார் இறக்கிவிட்டதாக தெரிவித்து பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.