முல்லைத்தீவில் திடீரென முற்றாக அகற்றப்பட்ட இராணுவமுகாம்! (Photos)
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவ படையினர் முகாம் ஒன்று முற்றாக அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றபட்டதில் இருந்து குறித்த பகுதி, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணி ஆகும்.
மேலும் , குறித்த காணியில் படைமுகாம் அமைத்து கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார்கள்.
சிலை வழிபாடு
இந்தப் பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை என்பன வைக்கப்பட்டு சிலை வழிபாடுகளையும் படைமுகாம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளார்கள்.
நீண்ட காலமாக குறித்த வீதியில் கண்காணிப்பு மற்றும் பிரதேசத்தின் கண்காணிப்புக்காக
அமையப்பெற்ற படை முகாம் கடந்த வாரங்களில் இருந்து முற்றாக அகற்றப்பட்ட நிலையில்
எவ்வித கட்டிடங்களோ புத்தர் , பிள்ளையார் சிலைகளோ காணக்கூடியதாக இல்லை என்பது குறிப்பிடதக்கது.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
