ஐரோப்பிய ஒன்றிய வருகையால் திடீரென விடுதலை செய்யப்பட்ட இளைஞன்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் காரணத்தினால் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா,
“தற்போதைய அரசாங்கம் உட்பட பல அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வதாக உறுதியளித்த போதிலும், அது மீண்டும் ஒரு இளைஞரை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியக் குழு
இரண்டு வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞரை அரசாங்கம் உடனடியாக விடுவித்துள்ளது.
கொம்பனித் தெருவில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் ஒரு இளைஞர் ஒரு ஸ்டிக்கர் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையொப்பமிட்ட உத்தரவின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
நடந்தது என்ன
ஆனால் என்ன நடந்தது? பல்வேறு நபர்களிடமிருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
GSP+ மதிப்பீட்டிற்காக ஐரோப்பிய ஆணையம் இலங்கைக்கு வரவுள்ளதால், தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் தொடர்பில் கேள்வி எழுப்பப்படும் என அவர் விடுவிக்கப்பட்டார்.
இலங்கை பொதுமக்களுக்கு இந்த விடயம் மறைக்கப்பட்டதை போல, இந்த விடயத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமிருந்து மறைக்க முடியாது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |