பிள்ளையான் கைதை தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்ட மட்டக்களப்பின் முக்கிய பகுதி
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பான விசாரணைகளில் சிஐடியின் நகர்வுகள் வேகமாக அதிகரித்த வருகிறது.
முன்னதாக மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சி அலுவலகத்தில் வைத்து சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டார்.
மேலும் விசாரணைக்காக அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நெருங்கிய சகா ஒருவரையும் சிஐடி கைது செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது விசாரணை நகர்வுகள் கிழக்கு பல்கலையை நோக்கி திருப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்கலைக்குள் சில கோப்புக்கள் தொடர்பிலான விசாரணைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் பல அறியப்படாத விடயங்களையும், பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி