இரண்டு பெண்களின் காதல் விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (Photos)
ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(27) மீண்டும் குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு
இதனையடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க ஒன்றரை வயது குழந்தையின் தாயார் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தை கோலங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அத்துடன் இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை.
இதனால் அவர் தொடர்பில் முன்னிலையான பெண் சட்டத்தரணி, இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்திற்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நீதிவான் குறித்த பெண்ணை விடுவித்து அனுமதி வழங்கியுள்ளார்.
உத்தரவு
எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை அழைத்து செல்ல மட்டக்களப்பில் இருந்து வான் ஒன்றில் பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு ஒன்று பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் இந்த வழக்கில் முன்னிலையாகி முதலாவது சந்தேக நபரான முஸ்லிம் பெண் தாயாரின் ஒன்றரை வயது குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விடயத்தையும் மன்று கவனத்தில் எடுத்து தாய் மற்றும் குழந்தையை பெண்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்குமாறு கட்டளையிட்டுள்ளது.
இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபரான முஸ்லிம் பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர், கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரை சேர்ந்த பட்டதாரியான தமிழ் பெண்ணிற்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அணுசரனையில் பெண் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
இரண்டு பெண்களின் காதல் விவகாரம்! இலங்கை பெண்ணை தேடி வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
