திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல்
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய MV Silver Spirit என்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையை இன்று வந்தடைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய கப்பலின் வருகையால் 21 லட்சம் ரூபா வருவாய்
அதிகளவான சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய கப்பல் இதுவென இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
MV Silver Spirit கப்பலில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள், திருகோணமலை, சீகிரியா, தம்புள்ளை,அனுராதபுரம், பொலன்நறுவை ஆகிய இடங்களுக்கான ஒரு நாள் பயணத்தின் பின்னர் நியூசிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் கப்பலின் வருகையானது இலங்கை சுற்றுலா தொழிற்துறைக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பு எனவும் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து, திரும்பிச் செல்லும் வரை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் துறைமுகத்திற்கு 21 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் எனவும் சமன் பெரேரா கூறியுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
