இலங்கை இந்திய கடற்தொழிலாளர் பிரச்சினை: மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டும் - அண்ணாமலை
“மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் கடற்தொழிலாளர்களையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்குள் வருகின்ற கடற்தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு” என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்களுடான சந்திப்பு இன்று யாழ். தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பினை தொடர்ந்து ஊடகவியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.
“இலங்கைக் கடற்பரப்பிற்குள்ள எல்லை தாண்டிவரும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பாக எமக்கு நிரந்தர தீர்வாக அமையாது. இதனை மனிதாபிமான அடிப்படையாக பார்க்க வேண்டும். நிச்சயமாக இலங்கை கடற்தொழிலாளர்கள் தமிழக கடற்பரப்புக்குள் வருவதை கூட அவர்களை வெளியிலே கொண்டுவருவதற்கு துணை நிற்போம்.
கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் படகில் ஒருநாள் வேலைக்காக மீன்பிடிப்பதற்காக செல்லுபவர்கள் இவர்களை குற்றம் செய்வதை போன்று பார்ப்பதை விட மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் கடற்தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். இந்தியாவில் இருந்து வருகின்ற கடற்தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும் என்பது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவராக ஒரு நாடாக ஒரு யுகத்தின் அடிப்படையில் பதில் சொல்லுவது
சரியாக இருக்காது ஒரு லட்சத்து நாற்பத்து மூவாயிரம் பேர்கள் இந்திய
தமிழகத்தில் அகதிகளாக இன்னும் இருக்கின்றார்கள் அவர்களில் பலர் பாரதிய ஜனதா
கட்சியில் பல பிரச்சினைகளை எடுத்து சொல்லியிக்கின்றனர்.
அவர்களுக்கான தீர்வுக்காக பாரதிய ஜனதா கட்சி முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. அதற்காக மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதற்காக முழுமையான தீர்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கம் எடுப்பார்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
தமிழகத்தின் முதலமைச்சர் மு.ஸ்டாலின், மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களே சொல்லியிருப்பதோ இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் கோரி வந்துள்ள தொப்புள் கொடியுறவினை மனிதாபிமாகத்தான் நடத்துவோம்.
இது இரத்த சொந்தங்கள் தொப்பிள் கொடி உறவுகள் அதனைபோன்று இலங்கையின் பொருளாதார நிலையும் சரியாக வேண்டும் என்பது நாம் எண்ணியுள்ளோம் அதனையும் மனிதாபிமாகத்தான் இந்திய அரசாங்கம் பார்க்கும் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.
இலங்கை வடக்கில் 2009 ஆண்டில் உலகத்தில் எங்கும் இல்லாத நிலையில் இந்திய அரசாங்கம் 46 ஆயிரம் வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்திய வந்து அதிகார பகிர்வுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிகொண்டுயிருக்கின்றது.
இதனை பிரித்துபார்ப்பதை விட 1974ஆம் ஆண்டு வரை இலங்கை இந்திய ஆகிய நாடுகள் தொப்பிள் கொடி உறவுகள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று இலங்கையில் வருகின்ற இந்தியவர்கள் எல்லா இடங்களுக்கும் போது கிடையாது இரண்டு நாடுகளும் பிரிந்து போனது போன்று இல்லாது கலாச்சார ரீதியாக தமிழர் என்றாக ஒன்றாக இணைந்து இருக்கின்றோம்.
இதுமாற்றுக்கருத்து இருக்கமுடியாது. தமிழக கடற்தொழிலாளர்கள் வருவது சர்வதேசரீதியாக இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்தொழிலாளர்கள் வருவது எப்போதும் விருப்பத்துடன் கிடையாது.
யாருமோ இலங்கை சிறையில் வந்து இருக்க வேண்டும் என்றநோக்கில் வருவது கிடையாது. இவர்களை வேறவர்கள் என்று பார்ப்பது கிடையாது இதனை சொந்தங்களாகத்தான் பார்க்கின்றோம்” என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
த.சித்தர்த்தன், செல்வம் அடைக்கல நாதன், தமிழரசுக்கட்சியின் தலைவர்
சோ.மாவைசேனாதிராஜா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவரின் உயர்நிலை
அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
