துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளரொருவர் உயிரிழந்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
காலி - அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் நேற்று (29.03.2023) குறித்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இன்று (30.03.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதிகம பிரதேசத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த சிந்து சந்தருவன் தொடம்கொடகே என்ற 31 வயதுடைய நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சந்தேகம்
கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அதில் அவரது சகோதரர் கொல்லப்பட்டார்.
இதேவேளை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன்
சிந்தக விக்கிரமரத்னவின் உதவியாளர்களால் இந்தத் துப்பாக்கிச்சூடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 13 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
