வானை கடத்தியவர் ஹொரவப்பொத்தான பகுதியில் மடக்கிப்பிடிப்பு (Photos)
கிளிநொச்சி - ஸ்கந்தபுரம் பகுதியில் வான் ஒன்றைக் கடத்தி சென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வானின் உரிமையாளரால் அவரது தோட்டுக்காணி முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் நேற்று
மாலை கடத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட வான் A9 பிரதான வீதியூடாக சென்ற போது வீதி போக்குவரத்து பொலிஸார் மறித்த போதும் வான் மறிக்கப்படாமல் சென்றுள்ளது.
ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் சோதனைக்காக நிறுத்தப்பட்ட போதும் நிறுத்தாது சென்ற சமயம் இடைநடுவே ஹொரவப்பொத்தான வீதிகளில் இரண்டு விபத்துக்களை ஏற்படுத்தி விட்டுத் தப்பியுள்ளது.
இதனால் அக்கராயன் பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து நேற்று இரவு சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று அக்கராயன் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.


எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
