அசாத் சாலி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Azath Salley) அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்துள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய(Jayantha Jayasoorya), எஸ். துரைராஜா(S.Thurairajah), யசந்த கோதாகொட(Yasantha Kodagoda) ஆகிய நீதியரசர்கள், அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்ததுடன் அதனை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri