இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வரவேற்பை வெளியிட்டுள்ள வளைகுடா நாடுகள்
நல்லிணக்கம், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உதவுவதற்கு GCC நாடுகள்(வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு) ஆர்வம் தெரிவித்துள்ளன.
ஜிசிசி என்ற வளைகுடா ஒத்துழைப்பு சபை நாடுகளின் சார்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் கத்தார் நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி ஹிந்த் பின்த் அப்துல்ரஹ்மான் அல் முஃப்தா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் இடம்பெற்ற, இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொறிமுறை
இதேவேளை,சர்வதேச பொறிமுறைகளின் பரிந்துரைகளை பின்தொடர்வதற்கான இலங்கையின் பொறுப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதற்கும் வளைகுடா நாடுகளின் அமைப்பு தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில்,தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கான உரையாடலின் செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தை குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan