அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு நிவாரணங்கள்! அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகள்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள்.
நிவாரணப் பணி
இதேவேளை சமைத்த உணவு, உலர் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான தலையீடுகள் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் மூலம் இந்த நபர்களுக்கு வழங்கப்படுகின்றது.
18 மாவட்டங்களில் 5,736 குடும்பங்களைச் சேர்ந்த 18,696 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேர் தற்போது 18 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.''என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
