அரசாங்கம் எப்போதும் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் - பிரதமர்
அரசாங்கம் எப்போதம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளான காலமிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், தனது ஆட்சியின் கீழ் ஊடக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடனும் பக்கச்சார்பற்ற வகையிலும் செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் அது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.