அரசாங்கம் கலைய வேண்டும்: அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்
நாட்டின் நிலைமை மாற ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகள்
எரிபொருள் நெருக்கடியால் மாணவர்களுக்கு பாடசாலை செல்ல முடியவில்லை. மக்களுக்கு ஒரு நகரில் இருந்து இன்னுமொரு நகருக்கு செல்ல முடியவில்லை.
கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளது, நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனம் இல்லை.
விலக வேண்டும்
நாடு இதனால் மேலும் வீழ்ச்சியடையும் எனவே, இந்த அரசு வீடு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.