அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கை:வீட்டுத் தோட்டம் குறித்து கூடிய கவனம்
சகல துறைகளும் உள்ளடங்கும் வகையில் விசேட புதிய பொருளாதார கொள்கையுடன் கூடிய பயணத்தை இந்த மாதத்தின் இறுதியில் இருந்து ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய வேலைத்திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அடுத்த வாரம் அறிவிக்க உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இந்த திட்டத்தில் வீட்டுத் தோட்ட துறை சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய வருடத்தின் ஆரம்பத்தில் அரசாங்கம் வேகமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் என அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் பலர் கூறியிருந்தனர்.