இலங்கை வெளியிட்ட கருத்தை முற்றாக நிராகரிக்கும் இந்திய அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பால் தாம் ஆச்சரியம் அடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது, இந்த தகவல் தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம், இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்புகளில் உள்ளதாக இந்திய அரசாங்கத்தின் சார்பில் உறுதிப்படுத்தினார்.
புதுடில்லியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அந்நாட்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளியிட்ட கருத்து உண்மை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, இத்திட்டம் தொடர்பில் அதானி நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam