தேரர்களை அவமதிக்கும் அநுர அரசாங்கம்! கொழும்பில் ஒன்றுகூடிய தேரர்கள்
பௌத்தலோக மாவத்தையில் நேற்றையதினம்(20.2.2026) முந்நூறுக்கும் மேற்பட்ட தேரர்களுடன் மாநாடு இடம்பெற்றது.
இதன்போது, பௌத்த மதத்திற்கும், பௌத்த தேரரிற்கும் இலங்கையின் தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது திருகோணமலை புத்தர் சிலை விவகாரமாகும்.
இந்தநிலையிலே, குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட முருத்தட்டுவே தேரர் நாட்டையும், சிங்கள இனத்தையும், பௌத்த மதத்ததையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தின் பிரதான நபர் கஸ்ஸப்பதேரர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அனைவருமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் news insight நிகழ்ச்சி...
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam