அரசாங்கம் தமிழர்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றது: கி.ஜெயசிறில் (photos)
கடந்த காலங்களில் எமது அம்மாக்களின் பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள், வடக்கு மற்றும் கிழக்கிலே பல்லாயிரக்கணக்கான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி
பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாறையிலிருந்து மூன்று பேருந்துக்கள், காரைதீவு பிரதேச சபையின்
தவிசாளர் கி.ஜெயசிறியின் தலைமையில் மட்டக்களப்பை இன்று (07.02.2023) சென்றடைந்துள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கி.ஜெயசிறி கருத்து தெரிவிக்கையில், இனப்படுகொலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்குரிய தீர்வு போன்றவற்றை சர்வதேசம் இதுவரையில் வழங்காமலிருக்கின்றது.
சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கை அரசாங்கம், 75 ஆண்டு காலமாக தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஆழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் எமது மக்கள் கடந்த காலங்களில் மிகவும் சொல்லொணாத் துயரங்களுக்கு முகங்கொடுத்த காலகட்டத்தில், அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும், இதுவரையில் அரசாங்கம் தமிழர்களை பகடைக்காயாகப் பயன்படுத்தி வெளிநாட்டு அரசாங்கங்களையும், சர்வதேசங்களையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றது.
இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவதற்காக வடக்கு, கிழக்கிலுள்ள பல்கலைக் கழக மாணவர்கள் எடுத்திருக்கின்ற இந்த போராட்டத்திற்கும், பேரணிக்கும் அம்பாறையிலிருந்து அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் எமது இளைஞர்கள், யுவதிகள், பெரியவர்கள் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எதிர்வரும் காலங்களிலும், எமது தமிழ் மக்கள் மீது கை வைக்கக்கூடாது, எமது நிலம் எமது தாயகமண் எமக்கு வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.



மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
