வாகன இறக்குமதியாளர்களின் அறிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்காத அரசாங்கம்
2021ஆம் ஆண்டு இறுதியில் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் நிலைமை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் விடுத்துள்ள அறிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் மத்தியில் தமது கருத்தை வெளியிட்ட வாகன இறக்குமதியாளர்கள் சங்க செயலாளர் அரோஷ ரொட்ரிகோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது. எனினும் இந்த ஆண்டு இறுதியில் நிலைமையை மதிப்பீடு செய்து இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று அமைச்சர் கப்ரால் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அதற்கான பொறுப்பான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனவே தமது சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri