அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது – ரஞ்சித் மத்துமபண்டார
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் பெருந்தொற்று தாக்கம் மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் என்பன பாரிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் எவ்வித திட்டமிடலும் இன்றி அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 13 பேர் கோவிட் காரணமாக வீடுகளில் உயிரிழந்துள்ளதாகவும், நாள் தோறும் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை கடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.