முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்
முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக விலையை பராமரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்துவதற்காக சந்தைக்கு வெளியிடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதாக பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை
மேலும், முட்டை உற்பத்தியை மேலும் கட்டுப்படுத்தவும், அதிக விலையை பராமரிக்கவும் இந்த உற்பத்தியாளர்கள் இறைச்சிக்காக விலங்குகளை விற்பனை செய்வதை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நாளை (22) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, அங்கு தற்போது நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri