அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு குழந்தைகள் பலி
அவுஸ்திரேலியா - மெல்பன் தென் மேற்கிலுள்ள Werribee பகுதியில், வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி நான்கு பிள்ளைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
Mantello Drive-இலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயணைப்புப்படையினர் அங்கு வந்தபோது பெரியளவில் தீ பரவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Arson and Explosives Squad detectives are investigating after four children perished in a house fire in Werribee this morning.
— Victoria Police (@VictoriaPolice) November 21, 2021
The exact cause of the fire is yet to be determined and the investigation is ongoing.
?https://t.co/W8t9QnFYnc pic.twitter.com/xRnw62kJsP
இதன்போது வீட்டின் மேற்கூரை முழுவதுமாக உடைந்துவிட்டதாகவும், தீயை கட்டுப்படுத்த 40 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவத்தில் 10 வயது மற்றும் 3 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளும், 6 வயது மற்றும் 1 வயதுடைய இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீயிலிருந்து தப்பித்த பெற்றோரும், 8 வயதுச் சிறுவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பிலும், இச்சம்பவம் சந்தேகத்திற்கிடமானதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri