விடுதலைப்புலிகளின் தலைவரால் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட விருந்துபசாரம்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் சரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனும் சரி முஸ்லீம் மக்கள் தொடர்பில் நல்ல நோக்கங்களை கொண்டிருந்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முஸ்லீம் காங்கிரஸ்
“முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இதுவரையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தாயகம் என்ற ஒன்று இருப்பதை வெளிப்படையாக கூறியதில்லை.
குறிப்பாக சபையில் சில முஸ்லீம் தலைவர்கள் பேசும்போது கூட குரோதமான விடயங்கள் வெளிப்படுத்துவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.
நாட்டில் விடுதலைப்புலிகளின் போராட்டம்இடம்பெற்ற காலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடர்க்கம் 2006ஆம் ஆண்டுவரை சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பொழுது, அதன் அங்கமாக அப்போதைய முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அதில் இணைந்திருந்தார்.
அவர் கிளிநொச்சிக்கு வருகைத்தந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்திருந்தார்.
இதன்போது, தனியான சமையல் காரரை அழைத்துவந்து பிரபாகரன், உரிய சமையலை செய்து வழங்கியிருந்தார்.
இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனாக இருக்கட்டும், முத்த தலைவர் தந்தை செல்வா முதல் - இரா சம்பந்தன் வரை முஸ்லீம் மக்கள் தொடர்பில் மிக தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர்.
ஹிஸ்புல்லா எம்.பி
மேலும் பெரும் விட்டுக்கொடுப்புக்களை முஸ்லீம்களுக்காக தமிழ் மக்கள் செய்திருந்தனர்.
எனினும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை கூறியிருந்தார்.
அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக்கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அப்படி இருந்தும் முஸ்லீம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் கொண்டிருக்கவில்லை.
காரணம் யுத்த காலத்தில் இரு பக்கங்களுக்கும் நிறைந்த காயங்கள் உள்ளன. யாழிலும் கூட விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முஸ்லீம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர்.
இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லீம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர்” என்றார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
