விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் அரவம் தீண்டி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வயலில் விவசாய அறுவடைக்கு சென்றவேளை மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த குறித்த விவசாயி மீது அரவம் தீண்டியுள்ளது.
இதன்போது விவசாயி மயங்கி விழுந்த நிலையில் மூங்கிலாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் மூங்கிலாறு கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் உரப்பிரச்சினைக்கு மத்தியிலும் விவசாய செய்கையினை மேற்கொண்டு பல
கஸ்டங்களை அனுபவித்து வந்த நிலையிலும் அறுடை செய்யும் போது குறித்த விவசாயி
அரவம் தீண்டி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam