கந்தேகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் பலவந்தமாக நுழைந்து
பெண் ஒருவரை பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்த முயற்சித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (02.02.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சந்தேகநபரின் விரலை துண்டாக்கிய நிலையில் காயமடைந்த நபர் அப்பகுதியை விட்டு தப்பிச்
சென்றதாகவும் ஆனால் காயமடைந்த விரலுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இதுவரை இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,