முல்லைத்தீவில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயது பாடசாலை சிறுமியினை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை கடந்த 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த குழந்தையின் மாமா வீட்டிற்கு வந்தபோது, தனிமையில் இருந்த சிறுமியை அவர் வன்புணர்ந்துள்ளார்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமி மாமாவின் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார்.
துஷ்பிரயோலத்துக்கு உள்ளான 13 வயது சிறுமி
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த அநீதியினை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிரதேச செயல சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை கைதுசெய்துள்ளார்கள்.



