இலங்கையின் இரண்டாவது நீர்வீழ்ச்சியின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்

Water fall
By Independent Writer Feb 15, 2021 09:56 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

இலங்கையில் சுற்றாடலை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் கடந்த காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் நமது நாட்டுக்கு வருகின்ற உல்லாச பயணிகள் விரும்பக்கூடிய சுற்றுலா மையங்கள் பல நமது நாட்டில் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகளுக்குத் தனி ஒரு பெருமையுள்ளது. அனைவரும் விரும்பக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இலங்கையில் ஈரவலய பிரதேசங்களான மலையக பிரதேசத்தை உள்ளடக்கியே இவை காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஊவா மாகாண பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகள் உலக வரைபடத்திலும் கூட சிறந்து விளங்குகின்றது. அதி உயரமான நீர்வீழ்ச்சிகளை இலங்கையில் பார்ப்போமேயென்றால் அதிக முக்கிய பங்கை ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை கொஸ்லந்தை பிரதேச சபைக்குட்பட்ட கொஸ்லந்தை வெல்லவாய பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது அதி உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி என யாவரும் அறிந்த விடயம். இந்த நீர்வீழ்ச்சியானது 722 அடி உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

இந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்வது ஒரு சிறப்பம்சமான விடயமாகும். பண்டாரவளை பூனாகலை பிரதேசத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றின் நீர் தியலும நீர்வீழ்ச்சியின் ஊடாக வழிந்தோடுகின்றது.

வற்றாத நீர்வீழ்ச்சியாகப் பெருமை கொண்டுள்ளது இந்த தியலும நீர்வீழ்ச்சி. ஈரவலப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியைப் பலரும் பிரதான வீதியிலிருந்தே கண்டு இரசிக்கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப் பகுதியில் சிறப்பு மிக்க அம்சங்களைக் காணமுடியும் என்பது பலரால் உணரப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த நீர்வீழ்ச்சியின் உயரப்பகுதிக்கு உள் நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் செல்வது இன்றைய காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது. அங்கே உயரத்திலிருந்து வேறு பிரதேசங்களை அவதானிக்கக் கூடிய ரம்மியமான காட்சிகளைக் காணக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு.

கொஸ்லந்தை பிரதேச சபையின் ஊடாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த தியலும நீர்வீழ்ச்சியின் உச்ச பகுதி அசுத்தமான சூழ்நிலை கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதற்கு பிரதான காரணம் அங்கே நீர்வீழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வோர் சூழலை மாசடையும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் காணப்படுவதாகக் கண்டறியப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சூழலுக்குப் பங்கம் விளைவிக்காது பராமரிப்பதாகவும், உள்நாட்டுப் பயணிகள் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்த நீர்வீழ்ச்சியின் உச்சப் பகுதியில் சமைத்து உணவு உண்கின்றார்கள், ஆனால் சமைக்கும் பொருட்களையும் அங்கு இடப்படுகின்ற கற்களாலான அடுப்புகளையும் அகற்றுவதில்லை.

அடிவாரத்திலிருந்து கொண்டு செல்லும் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். எஞ்சிய உணவுகளை வீசிவிடுகின்றனர். அதனால் துர்நாற்றங்கள் ஏற்படுகின்றது. அங்கு வளர்ந்துள்ள கற்றாளைச் செடிகளில் பெயர்களைப் பதித்து அச்செடிகளை நாசமாக்குகின்றனர்.

மது பாவித்து போத்தல்களை உடைத்து மாசுபடுத்துகின்றனர். அங்கு மரங்கள் வெட்டப்படுகின்றது. அதனூடாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுகின்றது. அக்கூடாரங்களில் சமூக விரோத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

குறிப்பாகப் பெண்களை அழைத்துச் செல்வோர் அங்கு தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற கூடாரங்கள் அகற்றப்படுவதில்லை.

இதுபோன்ற விடயங்களால் அந்த நீர்வீழ்ச்சியின் உச்ச பகுதி மாசுபடும் அளவிற்கு மோசமான நிலையைக் கொண்டுள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்படும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

எனவே கொஸ்லந்தை பிரதேச சபை இது குறித்துக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US