இலங்கையில் முக்கிய பகுதியொன்றை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யானையால் ஆபத்து
தம்புள்ளை - ஹபரன பிரதான வீதியின் திகம்பத்தஹ பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று 24 மணித்தியாலமும் வீதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த யானை அந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தி உணவு பெற்றுக் கொள்வதற்கு பழக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் பாரிய ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென வீதியில் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக குறித்த யானைக்கு வீதியில் பயணிப்பதவர்கள் ஏதாவது ஒரு உணவை வழங்குவதற்கு பழகியுள்ளார்கள். அத்துடன் வேறு பகுதிகளில் உள்ளவர்கள் இந்த யானைக்கு பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை கொண்டுவந்து வழங்கி வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்த யானை, வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டவுடன் அதற்கு அருகில் சென்று உணவை பெற பழகியுள்ளது. உணவு வழங்காத வாகனங்களை பின்னால் துரத்தி செல்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கட்டாயம் ஏதாவது ஒரு உணவுடன் அந்த வீதியில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த யானை கேட்டு வாங்கி உண்பதனால் இது ஆபத்தான விடயமாக மாறிவிடும் என வனவிலங்குதிணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு வழங்காத சாரதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021