தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு
தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தின் செல்வாக்கை சோதிக்கும் களம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தல் என்பது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது மாத்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் வேகமாக செல்வாக்கை இழந்து வருகிறது. எனவே புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் தீர்மானிப்பார்கள்.

முயற்சிகள் தோல்வி
இதுவரை தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இத்தேர்தல் தேசிய அளவில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது.
எவ்வாறாயினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri