தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு
தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தின் செல்வாக்கை சோதிக்கும் களம் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேர்தல் என்பது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது மாத்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் வேகமாக செல்வாக்கை இழந்து வருகிறது. எனவே புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் தீர்மானிப்பார்கள்.

முயற்சிகள் தோல்வி
இதுவரை தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இத்தேர்தல் தேசிய அளவில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது.
எவ்வாறாயினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணங்களை அரசாங்கம் தேடிக்கொண்டிருப்பதாக ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 13 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam