உயிரை பணயம் வைத்து நூற்றுக்கணக்கான பயணிகளை காப்பாற்றிய சாரதி
மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்தின் கோளாறு காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் சாரதியின் திறமையினால் தவிர்க்கப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் இருந்து சென்ற பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் இயங்காமல் போயுள்ளது.
இதன்போது பேருந்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் சாரதி பேருந்தை ஒரு கற்பாறை ஒன்றின் மீது மோதி தனது உயிரை பணயம் வைத்து பயணிகளை காப்பாற்றியுள்ளார். இதனால் சாரதி மட்டும் காயமடைந்துள்ளார்.
பயணிகள் எவ்வித காயமுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதி தனக்கும் காயம் ஏற்படாமல் பேருந்தை செலுத்தியிருந்தால் பாரிய பள்ளத்தில் விழுந்து பயணிகள் பலர் உயிரிழந்திருப்பார்கள் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தனது உயிரை பணயம் வைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan