5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் இலங்கை மக்களிடம் கும்பிட்டு கேட்கும் வைத்தியர்
இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர்.
தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வைத்தியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டு தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
“வைத்தியர்கள், தாதிகள் உட்பட சுகாதார பணியாளர்கள் 5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை. அப்பா வீட்டிற்கு வர மாட்டீர்களா என பிள்ளைகள் தொலைபேசி ஊடாக கேட்கின்றார். அப்போது எங்களுக்கு ஏற்படும் வேதனைகளை வார்த்தைகளினால் கூறி விட முடியாது. இவ்வாறான சூழ்நிலைகளை புரிந்து மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என கும்பிட்டு கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ். சிங்கள புத்தாண்டின் போதே இறுதியாக வீடுகளுக்கு சென்றோம். எங்களுக்கும் பிள்ளைகள் உள்ளனர். எனினும் வீடுகளுக்கு சென்று பார்க்க முடியாத நிலைமையிலேயே உள்ளோம்.
அம்மா அப்பாவை பார்ப்பதற்கு கடந்த 6 மாதங்களாக செல்லவில்லை. உண்மையாகவே தற்போது எங்களுக்கும் மிகவும் சோர்வாக உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
