இலங்கையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் ஒரு கோவிட் மரணம் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 527 ஆக உயர்வடைந்துள்ளது.
1. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் ஹம்பாந்தோட்டை பெரியாஸ்பத்திரியில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோவிட் ,நிமோனியா, இரத்தம் விசமாகியமை மற்றும் உடல் உறுப்புக்கள் செயலிழந்தமை போன்ற காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.