சிலிண்டர்களை உடனடியாக மீளப்பெற வேண்டும்! - அவசர கோரிக்கை விடுப்பு
சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்களைத் தடுக்க வீடுகள் மற்றும் சந்தைகளில் உள்ள பழுதடைந்த எரிவாயு சிலிண்டர்களை அதிகாரிகள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்,
“நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், சமூக அந்தஸ்து இருந்தபோதிலும், இந்த நாட்களில் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்த பயப்படுகிறார்கள். பிரச்சினையை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தாலும் பரவாயில்லை.
ஆனால் அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் ஆகும். அதன்பிறகு அந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முழு செயல்முறையும் குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்.
அந்த நேரத்தில், பல அனர்த்தங்கள் நடந்திருக்கும், அதனால்தான் அதிகாரிகளின் உடனடித் தலையீடு அவசியம்” என்று ஹேரத் சுட்டிக்காட்டினார்.
பழுதடைந்த எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மக்கள் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவதாகவும் ஜேஜேபி எம்பி குறிப்பிட்டார்.
இந்த சிலிண்டர்கள் திரும்பப் பெறப்பட்டு, மக்களுக்கு மாற்று வழிகளை உடனடி நடவடிக்கையாக வழங்க வேண்டும் என்றார் அவர். மேலும் பேசிய ஹேரத், ஒரு குறிப்பிட்ட சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோபேன் கலவையை ஜூலை மாதம் மாற்றியதை எரிவாயு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறினார்.
“இது குறித்து நாங்கள் சபையில் வினவியபோது, அந்த அமைப்பில் அப்படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அமைச்சர் கூறினார். ஆனால் தற்போது கலவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, புரோபேன் சதவிகிதம் அதிகரிக்கும் போது, ஒரு சிலிண்டரின் அழுத்தமும் அதிகரிக்கிறது. இத்தகைய மாற்றம் நிகழும்போது, ரெகுலேட்டர்கள் போன்ற உபகரணங்களின் தரம் குறித்த கேள்விகள் உள்ளன.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும். அதுவரை உடனடி நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri