பிரித்தானியாவின் தற்போதைய கோவிட் நிலவரம்! - மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 312 பேருக்கு கோவிட்- 19 உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கோவிட் - 19 பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 லட்சத்து 96 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கோவிட் - 19 தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது.ஷ மேலும், கோவிட் - 19 தொற்றிலிருந்து இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36.73 லட்சத்தை கடந்துள்ளது.
சுமார் 4.97 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கோவிட் -19 தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கோவிட் - 19 பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் கோவிட் - 19 தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், வைரஸை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வந்தாலும் கோவிட் - 19 பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டில் 15 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாரிசில் அத்தியாவசியம் இல்லாத கடைகள் ஓரு மாதத்துக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
போலந்து நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
