கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது – சசீந்திர ராஜபக்ஷ
கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு எப்பொழுது கொண்டு வரப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் வைத்து ராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
“தடுப்பூசி இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தி சிலர் இந்த தடுப்பூசியை தங்களுக்கு ஏற்றிக்கொண்டுள்ளனர். இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் கேள்விப்படுகின்றோம். அமெரிக்காவே சொல்கின்றது இந்த தடுப்பூசி அவ்வளவு வெற்றியளிக்கவில்லை என்று. கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.” என சசீந்திர ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
எனினும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும் இதுவரையில் தடுப்பூசி தருவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri