பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! - மரணங்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,547 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 156 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை 37,179 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், 120 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன். இதன்படி, உ யிரிழப்பு ஒரு வாரத்தில் இறப்புகள் 30 வீதமாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர்களை அறிமுகப்படுத்துவது உட்பட முழு முடக்கத்தை தவிர்ப்பதற்கான திட்டத்தை பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
பாடசாலைகள் மீண்டும் மூடப்படுவதைத் தவிர்ப்பதற்காக தற்செயல் நடவடிக்கைகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் மூடப்பட்டு சில சமூக இடைவெளி விதிகளை மீளப்பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய சுகாதார சேவை ஒரு "கடினமான நேரத்தை" எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சமூக இடைவெளி விதிகளை மீண்டும் அமுல்படுத்துவதை விரும்புவதாக பிரித்தானிய அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 19 முதல், கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் பிரித்தானியாவில் கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைப் பதிவு செய்தன.
பர்மிங்காம், லிவர்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், லண்டன் மற்றும் லெய்செஸ்டர் ஆகிய மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, இங்கிலாந்தில் கோவிட் வழக்குகள் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. இதன்படி, 70 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் நேர்மறை சோதனை செய்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனவரி தொடக்கத்தில் இரண்டாவது அலையின் உச்சத்தில், இங்கிலாந்தில் 50 பேரில் ஒருவருக்கு தொற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri