பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 799 கோவிட் - 19 தொடர்பான மரணங்களும், 10,625 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த வாரம் பதிவான 1,052 கோவிட் - 19 மரணங்கள் மற்றும் 12,364 வழக்குகளில் இருந்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் மொத்தம் 118,195 பேர் கோவிட் - 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், 4,058,468 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
22,31,199 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன், தற்போது 17,09,074 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், மொத்தம் 15,576,107 பேருக்கு கோவிட் - 19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 546,165 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாரந்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கிறிஸ்துமஸுக்குப் பிறகு முதல் முறையாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கோவிட் - 19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் கோவிட் - 19 வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை 10.98 கோடிக்கும் அதிகமானோர் கோவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 24.22 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan