ட்ரம்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Donald Trump United States of America World
By Dharu Feb 14, 2025 08:58 AM GMT
Report

கடந்த மூன்று வார காலமாக, மேற்கொள்ளப்பட்டுள்ள, USAID இன் நிதி முடக்கத்தை தற்காலிகமாக நீக்குமாறு, அமெரிக்க நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகத்துக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த திடீர் முடக்கம் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க உதவியை எதிர்பார்க்கும் பிற அமைப்புகளுக்கு ஏற்படுத்திய பெரும் சேதத்தை சுட்டிக்காட்டி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை இரத்து செய்வதற்கான திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த கோரி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து : ஒருவர் பலி

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் விபத்து : ஒருவர் பலி

நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, 90 நாள் மொத்த பணிநிறுத்தத்தால் எதிர்மறையாக பாதிக்கப்பட்டதாகக் கூறிய நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உதவி ஒப்பந்தக்காரர்களுக்கான நிதியை தற்காலிகமாக விடுவிக்குமாறு குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பு நடைமுறையில் இருந்த வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருந்தார்.

சுகாதார நிறுவனங்கள்

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள இரண்டு சுகாதார நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு காரணமாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | The Court Issued An Order Against Trump S Plan

அமெரிக்கா உள்ளிட்ட அரசு நிறுவனங்களை அகற்ற டிரம்ப் முயன்றுள்ளார். அவர் அரசாங்கத்தின், USAID எனப்படும் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின், மிகப்பெரிய மறுவடிவமைப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் செலவுகளைக் குறைக்கும் பணியை தனது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின்னணி

ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவில்லை என்று குற்றம் சாட்டி, ஆறு தசாப்தங்களாக செயற்பட்டு வரும், பழமையான அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமான USAID ஐ அகற்றுவதில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் நண்பர் எலோன் மஸ்க் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிக்கு, பெரிய பின்னடைவை ஏற்படுத்திய இரண்டாவது தீர்ப்பாக, இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

வோஷிங்டனில் உள்ள அமெரிக்க, மாவட்ட நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, உதவி குழுக்கள் மற்றும் பலர், வெளிநாடுகளில் உள்ள திட்டங்களுக்கான USAID நிதி திடீரெனவும் முழுமையாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறுவதை குறிவைக்கும் முதல் தீர்ப்பாக அமைந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நிதி குறைப்பு, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஒப்பந்தக்காரர்கள், விவசாயிகள் மற்றும் விநியோகஸ்தர்கள், ஏற்கனவே மேற்கொண்ட பணிகளுக்காக, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் ஊதியக் கொடுப்பனவுகளை இல்லாமல் செய்துள்ளது.

மேலும் அந்த நிறுவனங்களில் பரந்த அளவிலான பணிநீக்கங்களை கட்டாயப்படுத்தியுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாடுகளில், அமெரிக்க நிதியைப் பெறும் சுகாதார அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எய்ட்ஸ் தடுப்பூசி கூட்டணி மற்றும் உலகளாவிய சுகாதார சபை ஆகிய இரண்டு அமைப்புகள் தொடர்ந்த வழக்கிலேயே இந்த தற்காலிக உத்தரவை, குறித்த நீதிமன்ற நீதிபதி அமீர் அலி பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான USAID உதவித் திட்டங்களுக்கான நிதியை நிறுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும், அதை அகற்ற வேண்டுமா என்றும் தெரிவித்து, அந்த நிறுவனத்தின் நிதிகளை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US