நாட்டின் உத்தியோகபூர்வ நிதி மற்றும் தங்கத்தின் கையிருப்பு தொடர்பான தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் சொத்துக்களின் தொகை கடந்த நவம்பர் மாதம் அளவில் ஆயிரத்து 587 மில்லியன் டொலர்களாக இருந்தது என இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க (Shehan Semasinghe) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் தங்கத்தின் கையிருப்பு 382.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான இணக்கத்தையும் அத்தியவசிய பொருட்கள் மற்றும் மருந்தை கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பாக 1009.5 மில்லியன் டொலர்கள். அதில் 67 மில்லியன் டொலர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் கையிருப்பு எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri