நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (14-10-2021) நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வரையிலான வயதுடைய 5 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 14 மரணங்களும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 13449 ஆக உயர்வடைந்துள்ளது.