சமூகத்துக்குள் இன்னும் கொரோனா தொற்று பரவவில்லை: கலாநிதி சுதத் சமரவீர
இலங்கையில் இன்னும் கொரோனா தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்ளுக்கு இன்று கருத்துரைத்த அவர்,
பலரும் இலங்கையில் கொரோனா சமூகத்துக்குள் பரவியுள்ளது என்று கூறி வந்தாலும் இன்னும் அது சமூக தொற்றாக மாறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேல்மாகாணத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டபோதும் அவை ஏனைய மாகாணங்களில் இருந்து பரவியவை என்றும் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு இடத்திலும் வம்சத் தொடர்புகள் இல்லாமல் தொற்று கண்டறியப்படுமானால் அது சமூகத் தொற்று என்ற கருதப்படும்.
எனினும் அவ்வாறான நிலைமை இலங்கையில் இன்னும் ஏற்படவில்லை என்று சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை கொரோனாவை கண்டறியவதற்கான பீசீஆர் பரிசோதனைகளுக்காக நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.