தொழிற்சங்க வளர்ச்சியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு: சங்கத்தினரின் பாராட்டு
ஊடகவியலாளர்களின் பாரிய பங்களிப்பின் ஊடாகவே எமது தொழிற்சங்கம் பல்வேறு தீர்வுகளை உழைக்கும் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து வளர்ச்சி அடைந்து வந்தது என அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழர் கலாசார மண்டபத்தில் இன்று(01.05.2025) இடம்பெற்ற அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கியதுடன், அதனை அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து வழங்கியுள்ளார்கள்.
அரசாங்கத்திற்கு நன்றி
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எமது சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொழிலாளர்கள் சார் நலன்களில் அக்கறையோடு செயற்படுகின்ற இந்த அரசாங்கம், தொடர்ந்தும் சிறப்பாக நாட்டை முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 20 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை நாங்கள் இந்த மே தின கோரிக்கையாக அனுப்பி இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
