காசாவில் தொடரும் பலி எண்ணிக்கை: இஸ்ரேலிய இராணுவம் தீவிர தாக்குதல்
காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் காசாவின் பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் காசாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததிலிருந்து தற்போது வரை 37,765 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 86,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசாவில் 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போய் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மாயமானவர்களில் பலர் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்பதாகவும், மேலும் பல சிறுவர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று புதைத்ததாகவும் பாலஸ்தீனிய தரப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்நிலையில், காணாமல் போன சிறுவர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்களை பிரிந்து தவித்து வருவதால் அவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர் அலெஸ்சான்ரா சையே வலியுறுத்தியுள்மையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri